அறிவார்ந்த சிந்தனைகள் - பகுதி 1
நல்ல கருத்துக்களை கேட்பதும் நன்றே; நல்ல காட்சிகளை பார்ப்பதும் நன்றே; நல்ல செயல்களை செய்வதும் நன்றே என்ற முதுமொழிகளுக்கு ஏற்ப வாழ்நாளில் கேட்கப்பட்ட கருத்துக்கள், பார்த்த சிந்தனை சார்ந்த காட்சிகள், உணர்ந்த தத்துவங்கள் இவற்றை மையமாகக் கொண்டது இந்த நூல். அறிவார்ந்த சிந்தனைகள் என்ற வகையில் ஒவ்வொரு சமூக கருத்தையும் மையமாகக் கொண்டு ஆன்றோர்கள், சான்றோர்கள் கருத்துக்களை மெருகூட்டும் விதமாக 26 அத்தியாயங்களில் பகிர்ந்துள்ளோம். இந்த புத்தகம் நீதிநெறி போதனை வகுப்புகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் நம்புகின்றோம்.
